Pages

Monday 30 September 2013

"மதசார்பின்மை"-ஒரு பகட்டான வார்த்தை

அனைவருக்கும் வணக்கம்...பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது..உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பொதுத்தேர்தல்...இந்தியா இன்னமும் ஜனநாயகத்தின் பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றது என்று பறை சாற்றும் ஒரு நிகழ்வு..இதில் பல சர்ச்சைகளுக்குப் பிறகு  ராகுல் காந்தியையும் நரேந்திரமோடியையும் தத்தம் வாரிசுகளாக காட்டிக் கொண்டுள்ளன நாட்டின் இரு பெரும் கட்சிகள்....முன்னவர் சக்திவாய்ந்த ஒரு அரசியல் குடும்பத்தின் வாரிசு...பின்னவர் வழிவழியாய் இந்துத்துவா கொள்கையின் வாரிசு,,நான் இந்த பதிவில் பேசப்போவது இவர்களைப் பற்றியல்ல...இவர்கள் இருவருக்கும் பொதுவாக, அதே சமயம் ஒருவருக்கு நேர்மறையாகவும் ஒருவருக்கு எதிர் மறையாகவும் விளங்கும் ஒரு தத்துவம் பற்ற்றியது,,,

வாழையடி வாழையாக வரிக்கு வரி காங்கிரஸ் கூறும் ஒரு வார்த்தை....காந்தியின் கனவு...

,"மதசார்பின்மை"...மதசார்பற்ற ஒரு தேசம்...

 "மதசார்பற்ற,சமத்துவ, ஜனநாயக தேசம்..."இதுதான் இந்திய அரசியலமைப்பின் முகவுரை....ஆனால் மதசார்பின்ன்மை என்பது எந்த வரையில் நடைமுறையில் உள்ளது...?நம் மக்கள் மத சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்கிறார்கள்..?

"இது என்ன கேள்வி...நாங்கள் எல்லாம் ..சகோதரர்கள் போல் வாழ்கிறோம் என்று மேடைவாதம் செய்யும் நணபர்களுக்கு,..
."உண்மையில் நீங்கள் மற்றவர்களை சகித்துக் கொண்டு வாழவில்லை..கண்டு கொள்ளாமல் வாழ்கிறீர்கள் என்பது தான் உண்மை..."

மத சார்பின்மை என்பது. அரசியல், நிர்வாகம், நீதி இவற்றில் எல்லாம் மதத்தின் பெயரால் எந்த விதமான பாரபட்சமும் பாராமல் இருப்பது..ஆனால் நம்மூரில் மத சார்பின்மை என்பது நமது அறிவுஜீவிகளைப் பொறுத்த வரையில் பெரும்பான்மையினரையை (இந்துக்களை) திட்டித் தீர்ப்பது..,தன்னை ஒரு சிறுபான்மையின காவலனாகக் காட்டிகொள்வது...

எங்கிருந்து துவங்குகிறது இந்த பிரிவின் கதை..

இந்தியாவைப் பொறுத்தவரை இந்துக்கள் தான் ஆதிகுடிமக்கள், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பின்னால் வந்து குடி ஏறியவர்கள்..தன் நாட்டில் வந்து குடி ஏறிவர்கள் தங்களைப் போல் தான் பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பிரச்சனையின் ஆரம்பம்..

அதன் பின் சுதந்திரப் போராட்டம் துவங்கிய பிறகு சற்று மறையத் தொடங்கியது இந்த எண்ணம்...ஏனெனில் இருவருக்கும் ஒரே எதிரி...அவர்கள் சென்ற பிறகு மீண்டும் பற்றிக் கொண்டது...

தாங்கள் மதிக்கப்படுவதில்லை என்று பெரும்பான்மையினரும், தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று சிறுபான்மையினரும் உணரத் தலைப்பட்ட பின்னர் தான் துவங்கியது தலைவலி...

பிரிவினை விதைத்துச் சென்ற விஷ விதையில் பாபர் மசூதி தண்ணீர் ஊற்றி வளர்த்தது..கோத்ரா தொடங்கி இன்று முசாபர் நகர் வரையில் தொடர்கிறது இந்த பிரிவினைவாத நெருப்பு...

காரணம் என்று ஆராய்ந்தால் பலர் சொல்லும் பதில் இது தான்...

பொதுவாக இருவரும் வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்டவர்கள்.ஒருவருக்குப் புனிதமாவது இன்னொருவருக்கு அவ்வாறு இருப்பதில்லை (உதாரணம்...பசுவதை)

என்னால் இந்த கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது...தாராளமயமாக்கள் வந்த பிறகு கலாச்சாரத்தைக் கண்டுகொள்ள பலருக்கு நேரமில்லை..மேலும் இவர்கள் சொல்லும் பசுவதை இப்போது பெரிதாகப் பேசப்படுவதும் இல்லை...(ஆனால் இன்னும் நம்மூர் அரசியல்வாதிகள் அதைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது வேறு விசயம்).....

வேறு என்னவாக இருக்க முடியும்...

நான் சந்தித்த மனிதர்கள், அவர்களுடனான உரையாடலில் நான் தெரிந்து கொண்ட தற்காலத்து கருத்துகளின் அடிப்படையில் காரணங்கள் இடங்களுக்குத் தகுந்தார் போல் மாறுகின்றன...

பொதுவாக கலவரங்களின் துவக்கப்புள்ளி அற்பமாக இருந்த போதிலும் வெறுப்பின் ஊற்றுக்கண் ஆழமாக இருக்கிறது...

சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக அரசும் அரசாங்கக் கட்டிலில் அமர்பவர்களும் காட்டும் சலுகைகள் மற்றவர்களை உஷ்ணப்படுத்துகிறது.. (உதாரணமாக...காஷ்மீரில் இந்துக்களுக்கு,மற்ற பகுதிகளில் முஸ்லீம்களுக்கு..)..நம்மூரிலும்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று இருந்த இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனியே பிரித்துக் கொடுத்து அங்கேயும் பிளவு ஏற்படுத்தினார்கள் புண்ணியவான்கள்..அப்படிக் கொடுப்பதென்று முடிவு செய்தால் தனியே கொடுக்கலாமே...ஏற்கனவே குறைவு என்று கொதிப்பவனிடம் இருப்பதையும் பிடிங்கினால் என்னவாகும்....,

மேலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தில்..சிறுபான்மையினக்குத் தரப்படும் சில சிறிய ஆனால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் சலுகைகள்... உதாரணம்...இந்திய திருமணச் சட்டம் (அதாங்க..ஒருவனுக்கு ஒருத்தி )இஸ்லாமியர்களைக் கட்டுப்படுத்தாது...இது போதாதா குறை சொல்ல...

 அடுத்தடுத்த வீட்டில் வசித்தால் நாம் செய்வதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று நமக்கு வருகிற ஒரு குருட்டு மனோபாவம்...இதற்கு உதாரணம் சமீபத்தில் நடந்தது..என்னுடன் வட இந்தியாவில் பணிபுரியும் இஸ்லாமிய சக ஊழியரின் (தமிழர் தான்..வயதில் முதிர்ந்தவர்) குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது..தமிழில் பேசினால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது...நண்பர்கள் அருகில் இருக்க அந்த ஊழியரிடம் நான் " குழந்தைகளுக்கு ஏன் தாய் மொழியை கற்றுதரவில்லை?" என்று கேட்க அதற்கு அவர் " எங்கள் தாய் மொழி உருது தானே ..அது தெரியும் அவர்களுக்கு" என்று சொல்ல நண்பர்கள் பலருக்கு அதில் உடன்பாடில்லை...
" தமிழ்னாட்டில் பிறந்து விட்டு தமிழ் தாய் மொழி இல்லை என்பதா?"..என்று கொதிக்கத் தொடங்கிவிட்டனர்..பல இடங்களில் இதைப் போன்ற பிணக்குகள் தான் ஆரம்பம்..தமிழ் எனது தாய் மொழி இல்லை என்பதற்காக அவர் மேல் கோபம் கொள்வதா..இல்லை மத ரீதியாக ஒருவன் தான் பேசும் மொழிக்கு முக்கியத்துவம் தருவதைக் கண்டு கோபம் கொள்ளும் நண்பர்களைக் கண்டிப்பதா என்று குழப்பமாகிப் போனது எனக்கு..

அடுத்து பொருளாதாரம்...அதாவது வர்க்கபேதங்கள்..சற்று விளக்கமாகச் சொன்னால்....செல்வம், அதன் அடிப்படையில் ஏழை பணக்காரன் வேறுபாடு... பணம் சிறுபான்மையினரிடம் குவிந்து பெரும்பான்மை மக்கள் அதே இடத்தில் வறுமையில் வாடுவது...சற்று கூர்ந்து கவனித்தால் இப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் கலவரங்கள் ஏற்படும் பொழுதும் முதலில் குறிவைக்கப்படுவது உயிர்கள் அல்ல..உடைமைகள் தான் என்பது புரியும்..

சமீபத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றி யாரோ எங்கோ அவதூராகப் படமெடுக்க அதை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் என்ற பெயரில் சாலையை மறித்துவிட அதனால் பாதிக்கப்படுபவர் இந்துவாக இருந்தால் நிச்சயம் கோபம் வரும்... எடுத்தவனை விட்டுவிட்டு இருப்பவர்களை இம்சித்தால் என்ன நியாயம் என்று...

மேலே சொன்ன காரணங்கள் எல்லாம் நமது தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இந்தியா முழுவதும் என்று பார்க்கும் போது பரவலாகப் பரவிக் கிடக்கின்றன...

பொதுவாகவே இங்கே ஒரு கருத்து நிலவுகிறது..எந்த ஒரு இஸ்லாமியரும் இந்தியன் என்ற உணர்வை இரண்டாம் தர உணர்வாகவே கொள்வதாகவும் முதலில் மதம் முன்னிறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது..அவர்களின் தேசபக்தி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது...அப்துல் கலாம் தொடங்கி பலர் வந்து நின்றாலும் இன்னும் இந்த எண்ண்த்தின் தாக்கம் குறையவில்லை,,,அது தான் நிதர்சன உண்மை..

முதலில் பிரிவினைகளை உண்டாக்கும் ஒதுக்கீடுகளை நிறுத்துங்கள், அது தரும் நன்மை கடுகளவு என்றால் விளைவிக்கும் கேடுகள் கடலளவு..

எம் தலைவர்களே,  சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிப்பதாக சொல்லி அமைதியாக வாழ்கின்ற அம்மக்களை அலைபாயவிடாதீர்கள்....

மதம் என்பதையும் மொழி என்பதையும் மனிதத்திலிருந்து பிரித்து வைய்யுங்கள்...

என்றைக்கு இந்த அடிப்படை காரணங்களைக் களைந்து ஒற்றுமையாக வழி வகுக்கிறோமோ.... அன்றுவரை இந்தியாவைப் பொறுத்தவரை...மத சார்பின்மை என்பது ஒரு பகட்டான வார்த்தை மட்டுமே...,,,...