Pages

Friday 7 March 2014

பொட்டு....







ுருவங்களின் புல்வெளி நடுவே
அழகிய ஒரு வட்டத்தை
இத்தனை கச்சிதமாய்
எப்படி வரைகிறாய் நீ?..

வியர்வை வெள்ளத்தின்
வண்ணம் மாற்றும் பொட்டு தான்
உன் முகம் கவர்ந்த என் கவனவினாடிகளில்
சிலவற்றை களவாடிக் கொள்கிறது..

பொட்டினை நெற்றியில்
ஒட்டுவது அழகா?
வரைவது அழகா? என்றால்..
வரைவதற்கே வாக்களிப்பேன் நான்..
ஒட்டுவது ஒப்பனை..
வரைவது உன் ரசனை..
உன் ஒப்பனையைவிட
ரசனை அழகானது..

எந்த அறையின்
கண்ணாடி பொட்டு வைத்திருந்தாலும்
அங்கே நிச்சயமாய்
பெண்வாசம் வீசும்

அம்மா..
அக்கா...
தோழி என் பலர்
பழக்கப்படுத்திவிட்டதால்..
ஏனோ வெற்றிடமான
ஒரு பெண்ணின் நெற்றி
வெறுமையொடு நெருடுகிறது
எப்போதும் என்னை