Pages

Saturday 27 October 2018

நான் யார் ?

கவிதைகள்

 நான் யார் ?

ஆதிக்கவெறி கொண்ட மிருகமா நீ ?
ஆச்சார வெறி கொண்ட அடிமையா நீ ?
திராவிடனா ?
ஆரியனா ?
ஒடுக்கியவனா ?
ஒடுங்கியவனா ?
எவனடா  நீ ? என்போரே ,கேளும்

மயக்கத்தின் விளிம்பில் நிற்கும்  நான்
உளறினால் கவிஞன்
கிறுக்கினால் ஓவியன்
கத்தினால் பாடகன்
பொய் சொன்னால் இலக்கியவாதி
மெய் சொன்னால் குடிகாரன்
மயக்கம் தெளிந்தால் சம்சாரி

எம் அடையாளம் யாம் அடையவிரும்புவது
நீர் அளிப்பதென்று.