Pages

Saturday 21 May 2016

மேதகு ச ம உ க்களே....



மாற்றத்தை எம்மக்கள் மறுத்ததனால்
உம்மிடம் மன்றாடும் நிலை வந்ததெமக்கு...

மேசையை மட்டும் தட்டாதீர்கள்
அரசு எந்திரத்தின் மனசாட்சியையும் தட்டுங்கள்..
காலில் விழுவதோடு நின்று விடாதீர்கள்.
ஒடுங்கியவனின் சத்தமும் காதில் விழ விடுங்கள்
உங்கள் சத்தங்களால் சட்டசபை நாறினாலும்
சாக்கடைகள் நாறவேண்டாம்..

மீத்தேன் வேண்டாம்
காவிரியின் நீர்த்தேன் போதும் எமக்கு...
ஆற்று மண் அள்ளாதீர்
ஆறு நம்மூர் வந்தால்
வரவேற்க வழி இல்லை நமக்கு...
சட்டைப்பைகளை நிரப்பும் வேளை...
எமது காலியான வயிறும் நினைவில் வரட்டும்

ஆ...மறந்துவிட்டேன் ஒன்றை
சட்டசபை செல்லும் நேரம்
உள்ளாடைகளை மறவாதீர்கள்
வேட்டிகள் கிழியும் நாள் வெகுதொலைவில் இல்லை..

வாழ்த்துகள்...