Pages

Thursday 4 May 2017

நிசப்தத்தின் குரூரம்

கவிதைகள்

எட்டெடுத்து நடக்கையில்
இடையில் ஆடும் கொடியின் சத்தம்
ஏதோ ஒரு பொருள் உடையும் சத்தம்
மார்பில் பால் உறிஞ்சி
உதடுகள் சப்புகொட்டும் சத்தம்
எனக்கு  மட்டும் புரியும்
"உங்ங்ங்ங்ங்கா"என்றொரு சத்தம்
நெஞ்சில் நிற்கையில்
நிற்காத கொலுசின் சத்தம்
மகள் என்றொருத்தி வந்தபின்
அறிகிறேன் நிசப்தத்தின் குரூரத்தை