Pages

Saturday 7 January 2017

ஒளியில்லா விழிகொண்ட தேவமகள் உறங்குகிறாள் சாலையோரம்




ஒளியில்லா விழிகொண்ட தேவமகள்
உறங்குகிறாள் சாலையோரம்
உளிகண்ட சிலை போல் அவள் உடல்
கந்தல்களின் வழி காட்சி தரும்

விலங்கிட்ட விலங்காக
கிழிந்ததையும் துகிலுரிக்கும்
கண்கள் பல.
பார்வைகளின் பச்சையான இச்சைகளை
எங்ஙனம் மறந்து உறங்குகிறாள் ..
சிலை கட்டும் சேலையையே
உரித்து விடும் துச்சாதனர்கள் இடையே
இன்பக்கனவில் எப்படி ஆழ்ந்துவிட்டாள்

எட்டாய் கிழிந்த புடவையை
அவள் போர்த்தியபடி
"எடுபட்ட பயலுக எப்படி பாக்குறாய்ங்க பாரு "
கிழவியின் வசை மொழி
என்னையும் சேர்த்துதான் ..

ஒளியில்லா விழிகொண்ட தேவமகள்
உறங்குகிறாள் சாலையோரம்