இராமேஸ்வரத்தில் சிறு கிராமம்...
கதிரவன் கசங்கிய கண்களுடன் விழித்துப்பார்க்கிறான்..
அன்று ஐந்து வயது மேரிக்கு பள்ளி விடுமுறை..தினமும் தான் விழிக்கும் முன்போ அல்லது தூங்கிய பிறகோ வீட்டில் தென்படும் தனது அப்பா அன்று காலையில் இருந்தே தன்னுடன் இருப்பது அவளுக்குத் திருவிழா போல் இருந்தது.
முத்தமழையில் நனைத்து அருகிலிருந்த பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கித் தந்துவிட்டு..கையில் வலையுடன் டா டா காட்டியவாரே கடலுக்குள் நடந்து செல்லும் தந்தையை கை அசைத்தவாரே வழி அனுப்பி வைக்கிறாள் மேரி.
இரண்டு நாட்கள் கழித்து.
அம்மாவின் அழுகை கேட்டுக் கண் விழித்து கண்களை கசக்கியவாரே எழுந்து வெளியே வந்து பார்க்கிறாள்.
அப்பா ஏன் வீட்டு வாசலில் படுத்திருக்கிறார்..?
அவரை சுற்றி ஏன் அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள் ?
.
எப்போதும் வீட்டுக்குள் தூங்கும் அப்பாவிற்கு என்னவாயிற்று என்று புரியாமல் இருந்தாலும் அம்மா அழுவதால் அவளுக்கும் அழுகை வரும் போல் இருந்தது...எந்த பெட்டிக்கடையில் மேரியின் அப்பா மிட்டாய் வாங்கித்தந்தாரோ அதே பெட்டிகடையில் படபடக்கும் செய்தித்தாள் சொல்கிறது காரணத்தை..
இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு. இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேர் உயிர் இழந்தனர்...
முதல்வர் கண்டனம்...உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் கருணைத்தொகை அறிவிப்பு...
பிரதமருக்குக் கடிதம் எழுதப்போவதாக உத்திரவாதம்...
பாவம்..இனி இவர்கள் எழுதப்போகும் கடிதம் தன் தந்தையை மீட்டுத்தராது என்று மேரிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
இது போல் ஒன்றல்ல இரண்டல்ல... ஆயிரம் மேரிகள் அனாதை என்று பெயர் வாங்கி வெகு காலாமாகிறது...எனது சந்தேகமெல்லாம் கடிதம் எழுதும் நம் முதல்வர்கள் அதை பிரதமருக்கு அனுப்பினார்களா என்பதே..ஒரு வேளை,முகவரி தெரியாமல் இருந்துவிட்டார்களா?... இல்லை தமிழில் எழுதி இருந்து படிக்க முடியாமல் டெல்லிக்காரர்கள் கிழித்துவிட்டார்களா?..இதை எல்லாம் கேட்டால் நம்மை தேச துரோகி என்பார்கள்..வெளி நாட்டிலிருந்து நிதி வருகின்றது என்று கைது செய்வார்கள்...ஆகவே நாம் அதைவிடுத்து பிரச்சனையின் ஆணி வேரை மட்டும் பார்க்கலாம்..
ஒவ்வொரு நாள் செய்தித்தாளையும் மீனவர்களின் இந்த பிரச்சனை ஒரு சிறு பகுதியாகவாவது ஆக்கிரமித்திருக்கிறது...
ஆனால் முடிவில்லாத கதையாக இது நீண்டு கொண்டிருக்கக் காரணம் என்ன?
இறால்கள், இவைதான் பொதுவான காரணமாக சொல்லப்படுகின்றன..வாழ்வாதார நெருக்கடியின் காரணமாக இந்த இறால்களைப் பிடிப்பதற்காக நமது மீனவர்கள் " சர்வதேசக் கடல் எல்லைக் கோடு" என்று வரையறுக்கப்பட்ட பகுதியினைத்தாண்டி செல்லும் போது தான் அவர்களைக் கைது செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு..( கவனிக்கவும்... கைது செய்வதாக மட்டும் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.)..
ஆனால் இங்கே ஒரு விஷயம் நெருடலாக இருக்கும்..
சர்வதேச எல்லைக் கோடு என்று வரையறுக்கப்பட்ட இந்த எல்லை எப்படி உருவானது ?..
அதைத்தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என்று வரையறுத்திருப்பது எவ்வாறு...?
நம் மீனவர்கள் ஏன் அதை மீறுகிறார்கள்?...
இந்த கேள்விக்கான விடை சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது..அது... கச்சத்தீவு....
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு..1974 ல் இலங்கைக்குத் தாரை வார்க்கப்படுகிறது..அதற்குப் பிறகு தான் ஆரம்பிக்கிறது தலைவலி.....1974 ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்களுக்கு இந்த கடல் பகுதியில் மீன் பிடிக்க உரிமை இல்லை..இந்த கச்சதீவினைச் சுற்றி உள்ள பகுதிகள் தான் நல்ல மீன் பிடிப்புப் பகுதிகள்... அதைத்தாரை வார்த்தார்கள் நம்மவர்கள்...நேற்று வரை சொந்தமாயிருந்த வீட்டில் இனி நுழையக்கூடாது என்று உத்தரவிட்டால் யாருக்கும் கோபம் வரும்..ஆனால் தமிழனின் கோபம்,ஒற்றுமையின் அளவு தான் நமக்குத் தெரியுமே மத்தியிலே மந்திரி பதவி என்றால் மாநிலத்தையே விற்று விடுபவர்களாயிற்றே நாம்...அது தான் அன்றும் நடந்தது..நடந்த போராட்டங்கள் எல்லாம் வீழலுக்கு இறைத்த நீராய்ப் போனது..இன்று கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும் என்பெதெல்லாம் தும்பவிட்டு வாலைப் பிடிக்கும் கதைதான்..
மிகக் குறைவாக இருந்த இந்த கொலைகளும், கைதுகளும் அதிகமாகியது இலங்கை-விடுதலைப்புலிகள் யுத்தத்தின் போது தான் " கரும் புலிகள்" என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினை ஒடுக்குவதாக சொல்லிக் கொண்டு கடலில் தென்படும் தமிழர்கள் மீதெல்லாம் தாக்குதல்கள் தொடங்கின..அன்று தொடங்கி இன்று வரை தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையில் கடிதப்போக்குவரத்தை மட்டுமே இந்த பிரச்சனை உருவாக்கி இருக்கிறது...சிறந்த கடற்படை இருந்தும் இதுவரையில் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை...
இதுவரியில் நமது தரப்பின் குற்றச்சாட்டுகளைப் பார்த்தோம்..இனி இலங்கை தரப்பில் பார்க்கலாம்..
நைலான் வலைகள், இதைத்தான் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் மீது குற்றச்சாட்டாக சொல்கிறார்கள்...
இந்த நைலான் வலைகள் மற்றும் விசப்படகு கொண்டு அடித்தள மீன்பிடிப்பு (Bottom trawling ) என்ற முறையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்..உண்மைதான். இந்த நைலான் வலைகளும் , அடித்தள மீன்பிடிப்பு முறையும் கடல் வளத்தை அழித்துவிடக்கூடும்...ஆனால் அதற்காக எல்லை தாண்டினாலோ, நைலான் வலை வைத்திருந்தாலோ கொல்வது என்பது நியாயமல்லவே..
என்ன செய்யலாம்?...
அரசியல் ஆதாயம் தேடும் பிச்சைகாரர்களின் கூட்டம் கச்ச்தீவினை மீட்டெடுப்போம் என்று ஒரு பக்கம் உரக்கக் கூவிக் கொண்டே இருக்கட்டும்..நாம் மற்றவழிகளை சிந்திக்கலாம்..
பேச்சுவார்த்தை மூலம் நைலான் வலைகளை உபயோகப்படுத்துவதை இருவரும் தடுக்கலாம்
இறாலுக்காகத்தான் எல்லை தாண்டுகிறார்கள் என்றால் அதை தொழில்னுட்ப உதவி கொண்டு வேறு வழிகளில் உற்பத்தி செய்யலாம்
இலங்கை ராணுவம் போல் நாமும் நமது ராணுவத்தை இந்திய சமுத்திரத்தில் கண்காணித்து மீனவப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்..
எதற்கெடுத்தாலும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நாம் மீனவர்கள் சர்வதேச எல்லைக் கோட்டினை அடையாளம் கண்டு கொள்ள பயன்படுத்தலாம்....
ஆனால் நமக்கெங்கே இருக்கிறது நேரம்...ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தவும், செம்மொழி மாநாடு நடத்து சுற்றை நாசமாக்கவும், ஊழல் வழக்கிற்காக பெங்களூரு நீதிமன்றம் செல்லவுமே நேரம் சரியாக இருக்கிறது...
இன்று இராமேஸ்வரத்தின் கடற்கரை மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கும் மேரி, சில வருடங்களில் " என் தந்தையின் மரணத்திற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?" என்று கேட்கலாம்...
பதில் இருக்கிறதா நம்மிடம்.....
இல்லை அன்றைக்கும் கடிதம் எழுதிக் கொண்டிருப்பீர்களா ?
கதிரவன் கசங்கிய கண்களுடன் விழித்துப்பார்க்கிறான்..
அன்று ஐந்து வயது மேரிக்கு பள்ளி விடுமுறை..தினமும் தான் விழிக்கும் முன்போ அல்லது தூங்கிய பிறகோ வீட்டில் தென்படும் தனது அப்பா அன்று காலையில் இருந்தே தன்னுடன் இருப்பது அவளுக்குத் திருவிழா போல் இருந்தது.
முத்தமழையில் நனைத்து அருகிலிருந்த பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கித் தந்துவிட்டு..கையில் வலையுடன் டா டா காட்டியவாரே கடலுக்குள் நடந்து செல்லும் தந்தையை கை அசைத்தவாரே வழி அனுப்பி வைக்கிறாள் மேரி.
இரண்டு நாட்கள் கழித்து.
அம்மாவின் அழுகை கேட்டுக் கண் விழித்து கண்களை கசக்கியவாரே எழுந்து வெளியே வந்து பார்க்கிறாள்.
அப்பா ஏன் வீட்டு வாசலில் படுத்திருக்கிறார்..?
அவரை சுற்றி ஏன் அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள் ?
.
எப்போதும் வீட்டுக்குள் தூங்கும் அப்பாவிற்கு என்னவாயிற்று என்று புரியாமல் இருந்தாலும் அம்மா அழுவதால் அவளுக்கும் அழுகை வரும் போல் இருந்தது...எந்த பெட்டிக்கடையில் மேரியின் அப்பா மிட்டாய் வாங்கித்தந்தாரோ அதே பெட்டிகடையில் படபடக்கும் செய்தித்தாள் சொல்கிறது காரணத்தை..
இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு. இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேர் உயிர் இழந்தனர்...
முதல்வர் கண்டனம்...உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் கருணைத்தொகை அறிவிப்பு...
பிரதமருக்குக் கடிதம் எழுதப்போவதாக உத்திரவாதம்...
பாவம்..இனி இவர்கள் எழுதப்போகும் கடிதம் தன் தந்தையை மீட்டுத்தராது என்று மேரிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
இது போல் ஒன்றல்ல இரண்டல்ல... ஆயிரம் மேரிகள் அனாதை என்று பெயர் வாங்கி வெகு காலாமாகிறது...எனது சந்தேகமெல்லாம் கடிதம் எழுதும் நம் முதல்வர்கள் அதை பிரதமருக்கு அனுப்பினார்களா என்பதே..ஒரு வேளை,முகவரி தெரியாமல் இருந்துவிட்டார்களா?... இல்லை தமிழில் எழுதி இருந்து படிக்க முடியாமல் டெல்லிக்காரர்கள் கிழித்துவிட்டார்களா?..இதை எல்லாம் கேட்டால் நம்மை தேச துரோகி என்பார்கள்..வெளி நாட்டிலிருந்து நிதி வருகின்றது என்று கைது செய்வார்கள்...ஆகவே நாம் அதைவிடுத்து பிரச்சனையின் ஆணி வேரை மட்டும் பார்க்கலாம்..
ஒவ்வொரு நாள் செய்தித்தாளையும் மீனவர்களின் இந்த பிரச்சனை ஒரு சிறு பகுதியாகவாவது ஆக்கிரமித்திருக்கிறது...
ஆனால் முடிவில்லாத கதையாக இது நீண்டு கொண்டிருக்கக் காரணம் என்ன?
இறால்கள், இவைதான் பொதுவான காரணமாக சொல்லப்படுகின்றன..வாழ்வாதார நெருக்கடியின் காரணமாக இந்த இறால்களைப் பிடிப்பதற்காக நமது மீனவர்கள் " சர்வதேசக் கடல் எல்லைக் கோடு" என்று வரையறுக்கப்பட்ட பகுதியினைத்தாண்டி செல்லும் போது தான் அவர்களைக் கைது செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு..( கவனிக்கவும்... கைது செய்வதாக மட்டும் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.)..
ஆனால் இங்கே ஒரு விஷயம் நெருடலாக இருக்கும்..
சர்வதேச எல்லைக் கோடு என்று வரையறுக்கப்பட்ட இந்த எல்லை எப்படி உருவானது ?..
அதைத்தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என்று வரையறுத்திருப்பது எவ்வாறு...?
நம் மீனவர்கள் ஏன் அதை மீறுகிறார்கள்?...
இந்த கேள்விக்கான விடை சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது..அது... கச்சத்தீவு....
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு..1974 ல் இலங்கைக்குத் தாரை வார்க்கப்படுகிறது..அதற்குப் பிறகு தான் ஆரம்பிக்கிறது தலைவலி.....1974 ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்களுக்கு இந்த கடல் பகுதியில் மீன் பிடிக்க உரிமை இல்லை..இந்த கச்சதீவினைச் சுற்றி உள்ள பகுதிகள் தான் நல்ல மீன் பிடிப்புப் பகுதிகள்... அதைத்தாரை வார்த்தார்கள் நம்மவர்கள்...நேற்று வரை சொந்தமாயிருந்த வீட்டில் இனி நுழையக்கூடாது என்று உத்தரவிட்டால் யாருக்கும் கோபம் வரும்..ஆனால் தமிழனின் கோபம்,ஒற்றுமையின் அளவு தான் நமக்குத் தெரியுமே மத்தியிலே மந்திரி பதவி என்றால் மாநிலத்தையே விற்று விடுபவர்களாயிற்றே நாம்...அது தான் அன்றும் நடந்தது..நடந்த போராட்டங்கள் எல்லாம் வீழலுக்கு இறைத்த நீராய்ப் போனது..இன்று கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும் என்பெதெல்லாம் தும்பவிட்டு வாலைப் பிடிக்கும் கதைதான்..
மிகக் குறைவாக இருந்த இந்த கொலைகளும், கைதுகளும் அதிகமாகியது இலங்கை-விடுதலைப்புலிகள் யுத்தத்தின் போது தான் " கரும் புலிகள்" என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினை ஒடுக்குவதாக சொல்லிக் கொண்டு கடலில் தென்படும் தமிழர்கள் மீதெல்லாம் தாக்குதல்கள் தொடங்கின..அன்று தொடங்கி இன்று வரை தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையில் கடிதப்போக்குவரத்தை மட்டுமே இந்த பிரச்சனை உருவாக்கி இருக்கிறது...சிறந்த கடற்படை இருந்தும் இதுவரையில் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை...
இதுவரியில் நமது தரப்பின் குற்றச்சாட்டுகளைப் பார்த்தோம்..இனி இலங்கை தரப்பில் பார்க்கலாம்..
நைலான் வலைகள், இதைத்தான் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் மீது குற்றச்சாட்டாக சொல்கிறார்கள்...
இந்த நைலான் வலைகள் மற்றும் விசப்படகு கொண்டு அடித்தள மீன்பிடிப்பு (Bottom trawling ) என்ற முறையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்..உண்மைதான். இந்த நைலான் வலைகளும் , அடித்தள மீன்பிடிப்பு முறையும் கடல் வளத்தை அழித்துவிடக்கூடும்...ஆனால் அதற்காக எல்லை தாண்டினாலோ, நைலான் வலை வைத்திருந்தாலோ கொல்வது என்பது நியாயமல்லவே..
என்ன செய்யலாம்?...
அரசியல் ஆதாயம் தேடும் பிச்சைகாரர்களின் கூட்டம் கச்ச்தீவினை மீட்டெடுப்போம் என்று ஒரு பக்கம் உரக்கக் கூவிக் கொண்டே இருக்கட்டும்..நாம் மற்றவழிகளை சிந்திக்கலாம்..
பேச்சுவார்த்தை மூலம் நைலான் வலைகளை உபயோகப்படுத்துவதை இருவரும் தடுக்கலாம்
இறாலுக்காகத்தான் எல்லை தாண்டுகிறார்கள் என்றால் அதை தொழில்னுட்ப உதவி கொண்டு வேறு வழிகளில் உற்பத்தி செய்யலாம்
இலங்கை ராணுவம் போல் நாமும் நமது ராணுவத்தை இந்திய சமுத்திரத்தில் கண்காணித்து மீனவப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்..
எதற்கெடுத்தாலும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நாம் மீனவர்கள் சர்வதேச எல்லைக் கோட்டினை அடையாளம் கண்டு கொள்ள பயன்படுத்தலாம்....
ஆனால் நமக்கெங்கே இருக்கிறது நேரம்...ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தவும், செம்மொழி மாநாடு நடத்து சுற்றை நாசமாக்கவும், ஊழல் வழக்கிற்காக பெங்களூரு நீதிமன்றம் செல்லவுமே நேரம் சரியாக இருக்கிறது...
இன்று இராமேஸ்வரத்தின் கடற்கரை மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கும் மேரி, சில வருடங்களில் " என் தந்தையின் மரணத்திற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?" என்று கேட்கலாம்...
பதில் இருக்கிறதா நம்மிடம்.....
இல்லை அன்றைக்கும் கடிதம் எழுதிக் கொண்டிருப்பீர்களா ?
Un ezhutthu melum melum merugeri vittadhu :-)
ReplyDelete